வெள்ளி, 6 ஜூலை, 2012

SRI THULASI STHOTHRAM...ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்



ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக்கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க்கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே யுந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சை பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப்பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வானமாலையென்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாஸியுடன் மகிழ்வாய் நமஸ்தே

அன்புடன் நல்ல அருந்துளசி கொண்டு வந்து
மண்ணின் மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப் போல் கோலமிட்டு
செங்காவி சுற்றுமிட்டு திருவிளக்கு ஏற்றி வைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷிகேசர் தான் கேட்க‌
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்த பலன் நானளிப்பேன்
அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வரியம் நானளிப்பேன்
தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்
கிரகஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்
முமூக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடி காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்து குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்ய காலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகா தானஞ் செய்த பலன்
நானளிப்பேன் சத்தியமென்று நாயகியுஞ் சொல்லலுமே
அப்படியே யாகவென்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றுத் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால் 


வெற்றி பெறுவோம்!!!!

1 கருத்து: