புதன், 31 மார்ச், 2021

KANTHARALANGAARAM...SONG 2..கந்தரலங்காரம்.. பாடல் 2.


 பாடல்..2.

  அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்

எழுத்துப் பிழையறக் கற்கின்றி  லீரெரி மூண்டதென்ன

விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்

கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

 

புதன், 10 மார்ச், 2021

KANTHARALANGAARAM.. SONG 1...கந்தரலங்காரம்..பாடல் 1.

     



பாடல்..1.


          பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்

சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்

ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

 

திங்கள், 8 மார்ச், 2021

KANTHARALANGAARAM... KAAPPU... கந்தரல‌ங்காரம். ..காப்பு.

 



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!..

வெகு நாட்களாயிற்று உங்களையெல்லாம் சந்தித்து.. மீண்டும் ஒரு நெடுந்தொடருடன் வந்திருக்கிறேன்!. முருகனருளால்!...

கந்தரலங்காரம்.. ஸ்ரீ அருணகிரிநாதரின் அருட் கொடை... இதற்கு உரை பலரும் எழுதியிருக்கிறார்கள்.. அவர்கள் சொன்னதை விடவும், புதிதாக நான் ஏதும் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எனினும், முருகனருளை முன்னிட்டுத் தொடங்குகிறேன்...என் செயலாவது யாதொன்றும் இல்லை.. கந்தனே சரண்!.. இதன் மூலம் கந்தனை சிறிது நேரம் இணைந்தே தியானிக்கலாம் வாருங்கள்!...