வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி...முதல் திருமொழி


நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், நான்காவதாயிரமாக அமைந்திருக்கும், திருவாய்மொழியை அருளிச் செய்தவர் ஸ்ரீ நம்மாழ்வார். இதை வீதிகளில் சொல்வதில்லை. ஓரிடத்தில் அமர்ந்தே இறைவனைத் துதித்துப் பாராயணம் செய்வது வழக்கம்.  முதல் திருமொழிப் பாசுரங்களில், பகவானின் கல்யாண குணங்களையும், பரந்த இவ்வுலகனைத்திலும் அந்தர்யாமியாய் நின்றுறைவது பகவானே என்றும் துதித்துப் போற்றும் முதல் பத்துப் பாசுரங்களை இந்தப் பதிவில் காணலாம். இப்பாசுரங்களைப் பாராயணம் செய்ய, கிடைத்தற்கரிய, வீடுபேறாகிய மோட்சத்தை பகவான் ஸ்ரீமந் நாரயணனின் அருளால் அடையலாம் என 'கரவிசும் பெரிவளி ' எனத் தொடங்கும் பாசுரத்தில், ஸ்ரீ நம்மாழ்வார் அருளியிருக்கிறார்.

முதல் திருமொழி
கலி விருத்தம்

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்
இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே.

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவ விதிவழி யடையநின் றனரே.

நின்றனரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்
என்றுமோரியல்வினர் எனநினைவரியவர்
என்றுமோரியல்வொடு நின்றவெந்திடரே.

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரித் தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமைத் துளனே.

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ்  வுருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிரத் திவைபத்தும் வீடே.

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

வெற்றி பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக