வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

THIRUMAGAL EZHUNTHARULGA!.....திருமகள் எழுந்தருள்க!!!....


இன்று (8/8/2014) வரலக்ஷ்மி விரதம்!.

மதிமுகம் ஒளிர்ந்திட மறைகளும் துதித்திட மங்கை எழுந்தருள்க!
கதியுனை நம்பினேன் கருணையை தந்திட கமலி எழுந்தருள்க!

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

MUNNOOR SOTHTHU!...முன்னோர் சொத்து!.


அன்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம், வல்லமை இணைய இதழில், இந்த வாரத்துக்கான‌ வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க திருமதி. காமாட்சி அவர்கள்.. 80 வயது கடந்து, மிக அருமையான விஷயங்களை அற்புதமாகச் சொல்லும் இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது..இவரது வலைப்பூவிற்கு இங்கு சொடுக்குங்கள்!.

இவரது வலைப்பூவில், 'அன்னையர் தினத்தை' ஒட்டிய இவரது பதிவுகள் யாவும் அருமை.. அது எனக்கும் என் தாத்தா, பாட்டியின் நினைவை வரவழைத்து விட்டது.. 'முன்னோர் சொத்து' என்று பெயரிட்டிருக்கிறேனில்லையா!..நம் முன்னோர் சொத்து, பணம் காசு மட்டுமல்ல.. அவர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற புத்திமதிகள், நடைமுறைப்படுத்திக் காட்டிய பழக்கவழக்கங்கள், தெய்வபக்தி, முக்கியமாக, நொறுங்கிப் போன சமயங்களிலும் அதீத விவேகத்துடன் மீண்டெழுந்தது, எந்தச் சமயத்திலும் தெய்வத்தைக் குற்றம் சொல்லாத பண்பு, இன்னும்..இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன சொத்து தான் என்பது என் அபிப்பிராயம்..

திங்கள், 21 ஜூலை, 2014

வெள்ளி, 18 ஜூலை, 2014

PAADI UNAI THOZHUTHEN PARINTHENAKKU ARULE!..பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!

நாடி தினந்துதிக்கும் அன்பர் மனத்தினுள்ளே
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!

சனி, 12 ஜூலை, 2014

THALATTU!...தாலாட்டு!!!..

எங்க குடும்பத்தில குழந்தை பிறந்தா தொட்டிலிடும் போது பாடும் பாட்டு இது.. திரு.ஐயப்பன் கிருஷ்ணன்(ஜீவ்ஸ்) அவர்கள் சொன்னதற்கிணங்க முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.. இங்கயும் பதிவு பண்ணலான்னு ஒரு எண்ணம்..யாராச்சும் நிசமா, தாலாட்டு பாடணுன்னு ஆசைப்பட்டா தாராளமா இந்த பாட்ட ட்ரை பண்ணுங்க..