வியாழன், 25 செப்டம்பர், 2014

ஜெய் ஸ்ரீ துர்கா...1 (நவராத்திரி முதல் நாள்).

செஞ்சுடரும் சந்திரனும் இருவிழியாய் கொண்டவளே
வஞ்சமில்லா நெஞ்சினிலே வந்துதிக்கும் உமையவளே
வெஞ்சமரில் அசுரர்களை விரட்டியடித்தருள் செய்தாய்
தஞ்சமென்று வந்து விட்டோம் தாயே நீ காத்தருள்வாய்!

வியாழன், 11 செப்டம்பர், 2014

PAATTUKKORU BARATHI!....பாட்டுக்கொரு பாரதி!...


இன்று பாரதியார் நினைவு நாள்!.. மின் தமிழ் கூகுள் குழுமத்தில் இன்று நான் எழுதிய இரங்கற்பா உங்கள் பார்வைக்காக!...

பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!