புதன், 31 மார்ச், 2021

KANTHARALANGAARAM...SONG 2..கந்தரலங்காரம்.. பாடல் 2.


 பாடல்..2.

  அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்

எழுத்துப் பிழையறக் கற்கின்றி  லீரெரி மூண்டதென்ன

விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்

கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

 

புதன், 10 மார்ச், 2021

KANTHARALANGAARAM.. SONG 1...கந்தரலங்காரம்..பாடல் 1.

     



பாடல்..1.


          பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்

சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்

ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

 

திங்கள், 8 மார்ச், 2021

KANTHARALANGAARAM... KAAPPU... கந்தரல‌ங்காரம். ..காப்பு.

 



அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!..

வெகு நாட்களாயிற்று உங்களையெல்லாம் சந்தித்து.. மீண்டும் ஒரு நெடுந்தொடருடன் வந்திருக்கிறேன்!. முருகனருளால்!...

கந்தரலங்காரம்.. ஸ்ரீ அருணகிரிநாதரின் அருட் கொடை... இதற்கு உரை பலரும் எழுதியிருக்கிறார்கள்.. அவர்கள் சொன்னதை விடவும், புதிதாக நான் ஏதும் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எனினும், முருகனருளை முன்னிட்டுத் தொடங்குகிறேன்...என் செயலாவது யாதொன்றும் இல்லை.. கந்தனே சரண்!.. இதன் மூலம் கந்தனை சிறிது நேரம் இணைந்தே தியானிக்கலாம் வாருங்கள்!...

திங்கள், 21 ஜனவரி, 2019

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU... PART 4..மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு!.. பகுதி..4.

Image result for goddess simhavahini


சிம்மவாஹினி!!!!!!!...

சிம்ம வாஹனம் என்றாலே, ஸ்ரீதுர்க்கை, அதில் ஆரோகணித்திருக்கும் திருவுருவமே அன்பர் நெஞ்சத்துள் தோன்றும்...

ஆயிரம் வடிவும், ஆயிரம் பெயரும் கூரிய விழிகள் பொழியும் கருணையும் பிறவி வேரறுத்திடும் எழிலும் திறமும் தாளிணை சிறப்பும் கூறிடல் இயலுமோ??!..

சனி, 31 டிசம்பர், 2016

HAPPY NEW YEAR 2017!!!.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES




Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!..  2017ம் ஆண்டில், எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவும், இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்!.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்களுக்கு நன்றி....கூகுள் படங்கள்.

திங்கள், 9 மே, 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTTU.. PART...3...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..3.​


பகவான், இவ்வுலகில் நமக்காக என்னதான் செய்யவில்லை?!... தன் குழந்தைகள், தன்னை மட்டுமே நாடி, தன்னிடம் வந்து சேருவார்கள் என ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்!!!!... சங்கதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு..

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU...PART 2....மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..2.​



''நாரசிம்ஹவபு: ஸ்ரீமான்' என்று, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே பீஷ்மர் துதிக்கிறார் பகவானை!.. பெரியோர்கள் அருளிய பொருளுரையின்படி, சஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் மிக உயர்ந்த காயத்ரீ மந்திரத்தின் ஸாரம். அதில், ஸ்ரீ நரசிம்மரே துதிக்கப்படுகிறார்!.... நினைத்த பொழுதில், உடனடியாக எடுத்த அவதாரமென்பது, 'ஸ்ரீநரசிம்மாவதார'த்தின் ஏற்றம்!... 

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU.. PART 1...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி...1.



வணக்கம் நண்பர்களே!!...நீண்ட நாள் ஆச்சு சந்திச்சு!!.. நலமா இருக்கீங்கன்னே நினைக்கிறேன்.. 

தமிழ் வாசல் குழுமத்துல, 'விலங்குகள்' ங்கற தலைப்புல வந்த இழையில், விலங்குகள் சம்பந்தப்பட்ட இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்தோம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விலங்கு.., ஆசான் ஜீவ்ஸால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. கீதாம்மா, 'மீன்' பத்தி ரொம்பவே அற்புதமாக எழுதியிருந்தாங்க... எனக்கு 'சிம்மம்' கிடைச்சுது... திரு. தமிழ்த்தேனீ அவர்கள், 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்று தொடங்குமாறு சொல்லியிருந்தார்.. அவ்விதமே தொடங்கிய தொடர் பதிவின் பகுதிகளை இங்கே பகிர்கிறேன்!..

புதன், 13 ஜனவரி, 2016

PONGAL GREETINGS...பொங்கல் வாழ்த்துக்கள்!..

அன்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!..நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும், மகிழ்ச்சியும், அன்பும், அமைதியும் பால் போல் பொங்கிப் பெருகட்டும்... 

இறைவனருளால், எல்லாரும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்!..


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

SRUNGERI DHARISANAM... CHATHUR MAASYA KAALA BIKSHA VANTHANAM..சிருங்கேரி தரிசனம்.. சாதுர்மாஸ்ய கால பிக்ஷா வந்தனம்.


சிருங்கேரி தரிசனம் தொடரை, இறையருளால் எழுதுவதால், பெரியோர்களின் ஆசி கிடைத்ததன் பலனாக,  சாதுர்மாஸ்ய விரத காலத்தில், சிருங்கேரி சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.. சில நாட்கள் முன்பு, சென்று திரும்பினோம்..

வெள்ளி, 31 ஜூலை, 2015

SRUNGERI DHARISANAM... PART 4....SRI KERE ANJANEYA SWAMY TEMPLE...சிருங்கேரி தரிசனம்.. பகுதி 4..ஸ்ரீ கெரே ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்...

IMAGE COURTESY: WWW.SRINGERI.NET
ஸ்ரீ பகவத் பாதர், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் நான்கு திசைகளிலும் பிரதிஷ்டை செய்த நான்கு க்ஷேத்ர பாலகர்கள் திருக்கோயில்களுள் ஒன்று இது..ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை, மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார் ஸ்ரீ ஆசாரியர்.

திங்கள், 13 ஜூலை, 2015

திருமதி சுபாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!..

தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி.சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதை சிறப்பிக்கும் முகமாக, குழும உறுப்பினர்கள் அனைவரும் பங்களித்து, பட்டாபிஷேக மலர் தயாரிக்கப்பட்டது.. இதை ஒருங்கிணைத்தவர்,  திருமதி.வீ.எஸ்.ராஜம் அவர்கள்.. பட்டாபிஷேக மலரை தொகுத்து, தயாரித்து அளித்தவர், திருமதி. தேமொழி அவர்கள்.

வெள்ளி, 26 ஜூன், 2015

SRUNGERI DHARISANAM.. PART 3.. SRI DURGAMBA TEMPLE...சிருங்கேரி தரிசனம்..பகுதி 3... ஸ்ரீதுர்காம்பிகை திருக்கோயில்..

Image courtesy..Google Images
சிருங்கேரி திருத்தலத்தில்,  ஜகத்குரு  ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீசாரதாம்பிகையின் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்களை (க்ஷேத்ர பாலகர்கள்) பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த தெய்வங்களில், ஸ்ரீதுர்காம்பிகையும் ஒருவர். அம்பிகை, தெற்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். 

திங்கள், 11 மே, 2015

SIRUNGERI DHARISANAM!...PART..2..சிருங்கேரி தரிசனம்.. பகுதி 2.. ஸ்தம்ப கணபதி!!.....

Image courtesy: Google pictures...


சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் அருகில் இருக்கும் கோயில்களுள் ஒன்று, ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் திருக்கோயில். இது  நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோயிலில் குடிகொண்டருளும் சிவபெருமானுக்கு, வருடத்தின் முக்கிய தினங்களில், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகள், தம் திருக்கரங்களாலேயே அபிஷேக ஆராதனைகள் செய்வார். இந்த ஆலயத்திலேயே 'ஸ்தம்ப கணபதி' சன்னதி அமைந்திருக்கிறது.

வெள்ளி, 1 மே, 2015

PAANDIYARU SOKKARIDAM PAASAM VACHCHA RAASAATHTHI!...பாண்டியரு சொக்கரிடம் பாசம் வெச்ச ராசாத்தி!....


அதாகப்பட்டது மக்களே, சிருங்கேரி தரிசனத்தை அடுத்த பதிவில் தொடர முடிவு செஞ்சதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இன்னிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி, தேரோடும் வீதிகளில் தேர் பவனி வரும் திருநாள்.. ஊரில் இருப்பதால், நானும் தரிசனம் பண்ணும் பாக்கியம் கிடைத்தது.

சனி, 11 ஏப்ரல், 2015

SIRUNGERI DHARISANAM....சிருங்கேரி தரிசனம்!..


அன்பான நண்பர்களே!.. வணக்கம்!..

கட்டாயம் நலமா இருப்பீங்கன்னு  நினைக்கறேன்.. ஒரு பெரிய ஊர்(?!!) வலம் முடிச்சு இரண்டு நாள் முன்னாடி வந்து சேர்ந்தாச்சு!..

திருத்தல யாத்திரையாக இந்த முறை அமைந்தது.. சிருங்கேரி, தர்மஸ்தலா எல்லாம் தரிசனம் செய்ய இறையருள் கிட்டியது.. முன்னரே பார்த்தது என்றாலும் மீண்டுமொரு முறை தரிசனம்.

வெள்ளி, 20 மார்ச், 2015

IYAKKUNAR SIGARAM, K.BALACHANDERIN THIRAIPADANGALIL PENNIYA SINTHANAIGAL...இயக்குனர் சிகரம், கே.பாலசந்தரின் திரைப்படங்களில் பெண்ணியச் சிந்தனைகள்!..

பிப்ரவரி மாத 'இலக்கியவேல்' இதழில், இயக்குனர் சிகரம், திரு.கே.பாலசந்தர் அவர்களின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில் நான் எழுதி, வெளியான கட்டுரை இது.. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி இங்கு பதிகின்றேன்.. இலக்கியவேல் இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!..

இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமான இடம், இயக்குனர் சிகரத்திற்கு உண்டு.. இவரைப் பற்றி அறியாதோர் இல்லை.. பலப்பல வருடங்களாக, மாறுபட்ட கோணங்களில் பல திரைப்படங்களைக் கொடுத்து வரும் அவரது கலைப்பணியைப் பற்றிய அறிமுகம் தேவைப்படுவோர் வெகு சொற்பமே!...

புதன், 28 ஜனவரி, 2015

PITHTHAM THELIYA MARUNTHONDRIRUKKUTHU..பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது!..



'இலக்கிய வேல்' இதழில் வெளியான என் கட்டுரைகளில் ஒன்று இங்கு உங்கள் பார்வைக்கு....கட்டுரையை வெளியிட்ட, 'இலக்கிய வேல்' மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி!.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

KUZAHLOOTHI MANAMELLAAM...(OOTHUKKAADU VENKATAKAVI)..குழலூதி மனமெல்லாம்..(ஊத்துக்காடு வேங்கடகவி)


'இலக்கிய வேல்' இதழில் வெளிவந்த என் கட்டுரை இது!.. இங்கே உங்கள் பார்வைக்காக...இதனை வெளியிட்ட 'இலக்கிய வேல்' மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி!.