திங்கள், 23 ஜூலை, 2012

VAARANAMAAYIRAM.....நாச்சியார் திருமொழி, வாரணமாயிரம்




அமுதத் தமிழில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருமொழிகளாக அருளப்பட்ட பாசுரங்களே, நாச்சியார் திருமொழியாகும். சொல்மங்கலம், பொருள் மங்கலம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கும் நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' என்று துவங்கும்  பாசுரங்கள், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், தம் திருமணக்காட்சியை, கனவில் கண்டதை உரைக்கும் முகமாக அமைந்துள்ளது. திருமணம் ஆக வேண்டியவர்கள், திருமணம் தாமதப்படுபவர்கள், கீழ்க்கண்ட பாசுரங்களை பரமன் திருமுன் திருவிளக்கேற்றி, நித்தமும் பாட, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் திருவருளால், மனதிற்கிசைந்த வாழ்க்கைத் துணையை அடைந்து சிறப்புற வாழ்வது திண்ணம்.

மேலும், திருமணத்துக்கு முகூர்த்தப் பட்டு எடுக்கும் சமயத்தில், மூன்றாவது பாசுரமான, 'இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்' என்று துவங்கும்  பாசுரத்தை பதினோரு முறை பாராயணம் செய்து பின் புடவை, வேட்டி எடுக்க, மணமக்கள் வாழ்வில், பரமன் அருள் மழையெனப் பொழிந்து வாழ்விக்கும்.


வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

வெற்றி பெறுவோம்!!!.

2 கருத்துகள்:

  1. ஆடிப்பூரதுக்கு உகந்த நல்லதொரு அழகிய பதிவு.வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. //Bhuvaneshwar said...
    வாழ்த்துக்கள் அக்கா.//

    சகோதரரின் வருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு