ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ROHA NIVARANI ASHTAGAM......ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய ரோகநிவாரணி அஷ்டகம்.


ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகம், நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்த,மிக மகிமை வாய்ந்த துதியாகும். நம்பிக்கையுடன் இதைப் பாராயணம் செய்து அம்பிகையைப் பூஜித்தால், அம்பிகையின் அருளால், சகல விதமான நோய்களும், பிறவிப்பிணியும் நீங்கி பேரானந்த நிலையை அடையலாம்.

பகவதி தேவி பர்வத தேவி.
பலமிகு தேவி துர்க்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடு ஜோதியானவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவியளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

நாரணி மாயே நான் முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத்தாயே
ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானகயாளே காசி னியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்
பெருவலியானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

கோவுறை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே,
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியாளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்திர கண்டினியே
ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வெற்றி பெறுவோம்!!!

4 கருத்துகள்:

  1. வணக்கம் ,
    சகல ரோக நிவாரணி அஷ்டகம் சகலருக்கும் சகலவிதமான நன்மைகளை அருளும் மந்திரம்,
    துர்கையை துதிப்பவர்களுக்கு துயரம் இல்லா வாழ்வுகிட்டிடும்,
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. சகல ரோகங்களையும் தாபங்களையும் தீர்க்கும் அருமையான சகல ரோக நிவாரணி அஷ்டகம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. ///// Udhaya Kumar said...
    வணக்கம் ,
    சகல ரோக நிவாரணி அஷ்டகம் சகலருக்கும் சகலவிதமான நன்மைகளை அருளும் மந்திரம்,
    துர்கையை துதிப்பவர்களுக்கு துயரம் இல்லா வாழ்வுகிட்டிடும்,
    நன்றி//////

    வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ////இராஜராஜேஸ்வரி said...
    சகல ரோகங்களையும் தாபங்களையும் தீர்க்கும் அருமையான சகல ரோக நிவாரணி அஷ்டகம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்/////

    தங்கள் வருகைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு