செவ்வாய், 25 டிசம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்......பொண்ணுச்சாமி




இறக்கை கட்டி பறக்குதடா
குடும்ப விளக்கு ஒண்ணு
அவள்
ஆசைப்பட்டு ஏத்துக்கிட்டா
சத்தியமா
அவள் தாண்டா பொண்ணு!

வேலைக்கு போகும் பெண்ணுக்கு
காலை நேரம் தொல்லையடா
அதில்
அந்தக் கால நேரமும் சேர்ந்துக்கிட்டா
அதைவிட இம்சையடா!

கை அசைத்து பிள்ளைக்கு
பை கொடுத்து புருஷனுக்கு
அனுப்பி வைப்பாள்
அவள்
தன் கை பையை எடுக்க மறந்து
வேலைக்கு
பட்டினியில் போய் வருவாள்!

ஊருக்குள் உறவுக்குள்
அவள்
ஒண்ணோடு ஒண்ணா கலக்க
அவள் பெயரில் இல்லையடா
கொஞ்ச நேரம்
சந்தோஷத்தை கழிக்க!

வேலை முடித்து வீட்டுக்கு வரும்
மாட்டுப்பெண்ணுக்கு
வரவேற்பை கொடுக்கும்
வீட்டு வேலை நின்று முன்னுக்கு!

இந்த பூ மகளுக்குள்
இருப்பது புயல் வேகமடா
இவள்
உடம்புக்குள் இருப்பதெல்லாம்
கணினியின் பாகமடா!


















உழைப்பால்
வீட்டுக்கு வெளிச்சம் கொடுக்கும்
ஜாதி மெழுகடா
அவள் தன்னையே உருக்கிக்கொள்வதை
அவளே விரும்பும் அழகடா!

தேனி சேர்க்கும் தேனை
அது குடித்ததில்லை
இவள் சேர்க்கும்
அவளின் உழைப்பை
இவளே சுவைத்ததில்லை!

நிற்காமல் ஓடும்
இவள் ஒரு கடிகாரமடா
இந்த கடிகாரம் இருக்கும் வீட்டுக்கு
இவளே
திருஷ்டி படிகாரமடா!

கை எடுத்து கும்பிடுங்க
இந்தப் பொண்ணுங்க சாமியடா
அட
கொடுத்து வச்ச ஆளுங்க
இவளை கட்டிக்கொண்ட ஆசாமியடா.

-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக