ஞாயிறு, 23 டிசம்பர், 2012

THIRUPPALLIYEZHUCHI.....தொண்டரடிப்பொடியாழ்வார் பெருமான் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி



மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்த்
தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்த வூர்.

1. கதிரவன்குணதிசைச்சிகரம் வந்தணைந்தான்
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனரிவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலிலலை கடல்போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

2. கொழுங்கொடி முல்லையின் கொழுமலரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதமிதுவோ
எழுந்தனமலரணைப் பள்ளி கொள்ளன்னம்
ஈன்பனிநனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின்பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கியவானையினருந் துயர்கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 

3. சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்
துன்னியதாரகை மின்னொளி சுருங்கிப்
படரொளிபசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருளகன்றது பைம்பொழிற்கமுகின்
மடலிடைக்கீறி வண்பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளிதிகழ் தருதிகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

4. மேட்டிளமேதிகள் தளைவிடுமாயர்கள்
வேய்ங்குழலோசையும் விடைமணிக்குரலும்
ஈட்டியவிசை திசைபரந்தன வயலுள்
இரிந்தனசுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனிவேள்வியைக் காத்து, அவபிரத-
மாட்டியவடுதிறலயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

5. புலம்பினபுட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக்கனைகடலரவம்
களிவண்டுமிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந்தொடை யல்கொண்டடியினை பணிவான்
அமரர்கள் புகுந்தனராதலிலம்மா!
இலங்கையர் கோன்வழிபாடு செய்கோயில்
எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.

6. இரவியர்மணி நெடுந்தேரோடு மிவரோ
இறையவர் பதினொரு விடையருவரோ
மருவியமயிலினனறுமுகனிவனோ
மருதரும் வசுக்களும்வந்து வந்தீண்டிப்
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனையநின் கோயில் முன்னிவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

7. அந்தரத்தமரர்கள் கூட்டங்களிவையோ
அருந்தவமுனிவரும் மருதருமிவரோ
இந்திரனானையும் தானும்வந்திவனோ
எம்பெருமான்! உன்கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச்சாதர்நூக்க
இயக்கருமயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

8. வம்பவிழ்வானவர் வாயுறைவழங்க
மாநிதிகபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டுநன் முனிவர்
தும்புருநாரதர் புகுந்தன்ரிவரோ
தோன்றினனிரவியும் துலங்கொளிபரப்பி
அம்பரத்தலத்தினின்றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

9. ஏதமில்தண்ணுமையெக்கம்மத்தளி
யாழ்குழல் முழவமோடிசை திசைகெழுமிக்
கீதங்கள் பாடினர்கின்னரர் கெருடர்கள்
கெந்தருவரவர் கங்குலுமெல்லாம்
மாதவர் வானவர் சாரணரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

10. கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன்கனை கடல்முளைத் தனனிவனோ
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறித்
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்ததுளவமும் கூடையும் பொலிந்து
தோன்றியதோள் தொண்டரடிப் பொடியென்னும்-
அடியனை, அளியனென்றருளி யுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக