புதன், 16 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 5, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 5. திருமகளே வளமருள்க...

பொன்னும் மணியும் தந்திடுவாய் நீ
பொலிவும் புகழும் தந்திடுவாய்.
எண்ணில் இன்பம் தந்திடுவாய் நீ
ஏழ்மை விலகச் செய்திடுவாய்.

விண்ணும் மண்ணும் தினந்தொழுமே நீ
விழியசைத்தால் வரும் பொன்னகரே!
வீரம் தானம் தவமெல்லாம் நீ
விரும்பும் மனிதர் அடைவாரே!.

அருளது அமுதெனப் பெருக்கிடுவாய் நீ
பொருளது நிறைந்திட அருளிடுவாய்!
அகமதில் இலங்கிடும் நல்லொளியே நீ
சுகத்தினைத் தந்திடும் வெண்மதியே!

அலைமக‌ள் திருமகள் மலர்மகளே நீ
அழகுக்கு அழகெனத் திகழ்பவளே!
பவத்தினை தீர்த்திடும் பொன்னொளியே நீ
நவத்தினைத் தாண்டிய நல்லழகே!

ஆதியும்  அந்தமும் உன்னடியே நீ
ஆனந்த சொரூபிணி அம்பிகையே!
இன்னருள் தந்திடும் பொன்மயிலே நீ
சொன்னதும் வந்திடும் நவநிதியே!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

4 கருத்துகள்: